அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையின் சுப்பர் கோடிபதி வெற்றியாளர்கள் இருவருக்கு பிரதமரின் கரங்களினால் காசோலை வழங்கல்

09-January-2021

அபிவிருத்தி லொத்தர் சபையின் கோடிபதி கப்ருக மற்றும் ஜயோதா லொத்தர்களினூடாக உருவாக்கப்பட்ட சுப்பர் கோடிபதி வெற்றியாளர்கள் இருவருக்கு காசோலை வழங்கல் 2021.01.07ம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது.

அதன்போது 'கோடிபதி கப்ருக" 652வது வாரத்தின் சுப்பர் பரிசுப்பொதியாகிய ரூ.87,991,625 பணத்தொகையினை வெற்றிபெற்ற அபன்பொல பிரதேசத்தினை சேர்ந்த திரு.குமார பதிரணலாகே சுனில் அவர்களுக்குரிய காசோலை வழங்கப்பட்டது. அவ் அதிர்ஷ்டகரமான லொத்தரினை விற்பனை செய்த விற்பனை முகவர் அபன்பொல பிரதேசத்தினை சேர்ந்த திரு.யூ.டி.எல்.தினேஷ் குமார் ஆவார்.

மேலும் ஜயோத 1717வது வாரத்தின் சுப்பர் பரிசுப்பொதியாகிய ரூ.57,138,276 பணத்தொகையினை வெற்றிபெற்ற கல்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த திரு.ஏ.ஜீ.பி.கொடிதுவக்கு அவர்களுக்கும் அதன்Nபுhது காசோலை வழங்கப்பட்டது. அவ் அதிர்ஷ்டகரமான லொத்தரினை விற்பனை செய்த விற்பனை முகவர் கல்கமுவ பிரதேசத்தினை சேர்ந்த விற்பனை முகவர் திருமதி.ரி.எம்.எஸ்.பி.மெணிகே ஆவார்.

இந் நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தவைர் திரு.அமித கமகே மற்றும்  அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



07-December-2020

...

25-November-2020

...

சிறப்புச் செய்தி