அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

இலங்கையின் அதிகளவில் இலட்சாதிபதிகளை உருவாக்கிய சசிரி லொத்தரின் “ இலட்சாதிபதி அதிர்ஷ்டம் ” எனும் பெயரில் விசேட சீட்டிழுப்பொன்று மார்ச் மாதம் 15 திகதி இடம்பெறவுள்ளது.

18-February-2022

இலங்கையின் முதல் டிஜிட்டல் லொத்தராக லொத்தர் கொள்வனவாளர்களுக்கு புதிய அனுபவத்தின் ஊடாக அதிர்ஷ்டத்தினை உருவாக்கிய கவர்ச்சிகரமான சசிரி லொத்தர், லொத்தர் உலகில் அதிகளவான இலட்சாதிபதிகளை உருவாக்கிய லொத்தராகும்.

2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் 01ம் திகதி முதல் இன்று வரை அதன் ஊடாக உருவாக்கப்பட்ட இலட்சாதிபதிகளின் எண்ணிக்கை 206 ஆகும். தொடர்ச்சியாக இலட்சாதிபதிகளை உருவாக்கும் வெற்றிகரமான சசிரி லொத்தரின் விசேட சீட்டிழுப்பொன்றினை வருகின்ற மார்ச் 15ம் திகதி நடாத்த அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சசிரி “ இலட்சாதிபதி அதிர்ஷ்டம் ” எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவ் விசேட சீட்டிழுப்பிற்குரிய லொத்தர்களை சந்தைக்கு வெளியிடல் 2022.02.18ம் திகதி அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்றுநர் திரு. அஜித் குணரத்ன நாரகல அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது. இலட்ச்சக் கணக்கில் பணப் பரிசு மழை பொழியும் “ இலட்சாதிபதி அதிர்ஷ்டம் ” விசேட சீட்டிழுப்பினூடாக 100,000 ரூபாய் பணப் பரிசுகள் பலவற்றினை இவ் சீட்டிழுப்பின் மூலம் வெல்ல முடியும். அத்துடன் சசிரி லொத்தரின் வழமையான பரிசுகள் மாற்றமின்றி காணப்படும்.

நாடளாவிய ரீதியில் இலட்சாதிபதிகளை ஒன்றன் பின் ஒன்றாக உருவாக்கும் “இலட்சாதிபதி அதிர்ஷ்டம் ” வெற்றியாளராவதற்கு நீங்களும் இன்றே உங்களின் கைத்தொலைபேசியினூடாக னுடுடீ ளுறநநி யுpp ஊடாக அல்லது அருகில் உள்ள விற்பனை குடிலில் சசிரி “ இலட்சாதிபதி அதிர்ஷ்டம் ” லொத்தர்களை அதிகம் அதிகம் கொள்வனவு செய்யுங்கள்.



சிறப்புச் செய்தி